அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை

முதல்வர் சீதாலட்சுமி 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தெரிவித்ததாவது,, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி விருதுநகரைச் சார்ந்த குருமூர்த்தி என்ற 22 வயது இளைஞர் தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் தலையில் முன் பகுதியில் எலும்பு உடைந்து மூளையில் இரத்தக் கசிவு இருப்பதை கண்டறிந்தனர்.

அவரது தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 29ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்க மருந்து வழங்கி மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் மூளையில் ஏற்பட்ட உடைந்த எலும்பு அகற்றப்பட்டு அங்கு இருந்து ரத்தக் கட்டியும் அகற்றப்பட்டதாகவும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக இது போன்ற மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போதை வரை இது போன்ற அறுவை சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் இனி இது போன்ற சிகிச்சைகள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனிலேயே செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story