உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி அடுத்த புது உச்சிமேடு அருகேயுள்ள முனியப்பன் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போன நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.  

கள்ளக்குறிச்சி அடுத்த புது உச்சிமேடு அருகேயுள்ள முனியப்பன் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போன நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராயப்பன், 57; இவர், பட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். கடந்த 2ம் தேதி காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story