வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

திருட்டு

திருவோணம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல்நிலையத்தில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் - சாமிக்கண்ணு (வயது60). - இவர் கடந்த மாதம் (மார்ச்) பணி ஓய்வு பெற்றார். இவருக்கு தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள ஊரணிபுரம் கலியரான்விடுதி சாலையில் சொந்தமாக வீடு உள்ளது. சாமிக் கண்ணு அவரது மனைவி உள்ளிட்டோர் சம்பவத்தன்று அறந்தாங்கி காவல் குடியிருப்பில் உள்ள வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்து வருவதற்காக சென்றனர். இதன் பிறகு சாமிக்கண்ணு செவ்வாய்க்கிழமை தனது ஊரணிபுரம் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சாமிக்கண்ணு உள்ளே சென்று பார்த்த போது அவரது வீட்டில் படுக்கை அறை மற்றும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.13 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் மர்ம நபர்கள் வீட்டில் நகைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டிலுள்ள அனைத்து அறைகளிலும் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் நகைகள் இல்லாததால், வீட்டிலிருந்த பணத்தை மட்டும் திருடி சென்றதும் தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த திருவோணம் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தஞ்சையில் இருந்து மோப்ப நாயை வரவழைத்து துப்பு துலக்கினர். மேலும் பணம் திருடிய நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story