வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை அடுத்த மேட்டுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பூ வியாபாரி பெருமாள் (58). இவரது மனைவி சாந்தி (50).இவர் பாணாவரத்தில் உள்ள தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு சாந்தி அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தடயங்களை சேகரித்து, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story