திருமருகல் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு - வீணாகும் குடிநீர்

திருமருகல் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு - வீணாகும் குடிநீர்

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

திருமருகல் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் குடிநீர் குழாயில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக குளம் மற்றும் சாலைகளில் குடிநீர் ஓடி வீணாகிறது.இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உள்ளது.

கோடை காலம் தொடங்கி இருப்பதால் பயன்பாட்டிற்கு போதிய குடிநீர் இன்றி தொலைதூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

Tags

Next Story