தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் - ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் - ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள பூதமங்கலம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் காலை உணவுகளை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள மற்ற தொடக்க பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் பசியுடன் வருகிறார்கள் அதனால் அவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்பதற்காக தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து அதன்மூலம் மாணவர்களின் பசியை போக்கி, அவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு பல திட்டங்கள் மூலம் மாணவர்கள் நல்ல முறையில் செழிப்பாக படிப்பதற்கு உதவி வருகிறார். இல்லம் தேடி கல்வி என்னும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் போன்ற திட்டங்களில் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு பல நல்ல திட்டங்கள் செய்து வருகிறார் அதன் மூலம் மாணவர்கள் நீங்கள் சிறப்பான முறையில் படித்து அனைவரும் சாதிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வழங்கும் உணவை தரமாகவும் சுவையாகவும் வழங்க வேண்டும் அதுவும் குறிப்பாக நேரத்துடன் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை கூறினார்.

Tags

Next Story