நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் விரைவில் தொடக்கம்

நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் விரைவில் தொடக்கம்

ஆட்சியர் ஆய்வு 

காவனூரில் உள்ள நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் சமையல் அறையை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவனூர் ஊராட்சியில் எம் டி அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளதையொட்டி சமையல் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாணவர்களுக்கு சுத்தமான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும். எலி பல்லி போன்றவை சமையல் கூடத்திற்கு உள்ளே வராத வகையில் வலைகள் அடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story