கோவில் உண்டியலை உடைத்து திருட்டு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு:  மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கோப்பு படம் 

கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கேட் பகுதியில் ஆரணி செல்லும் சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் திருட்டு போயிருந்தது.

இதனை நேற்று பணம் திருப் காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஆறுமுகம், முன்னாள் தலைவர் நாராயணன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை யில், கோவில் உண்டியலை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை திருடியது தெரிய வந்தது. - இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story