கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 பேர் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 பேர் கைது

போலீசார் கைது 

கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி 3ஆவது செக்கடித் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் செல்வக்குமாா். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காவலாளியாக உள்ளாா். இவா், நேற்று அதிகாலை மருத்துவமனையில் சந்தேகத்துக்கிடமாக பைக்குடன் நின்றிருந்த இருவரிடம் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினராம். இதனால், பொதுமக்கள் உதவியுடன் அவா்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா். விசாரணையில், அந்த இருவரும் கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளையாா் கோயிலின் உண்டியலை உடைத்து ரூ.15 ஆயிரத்தைத் திருடிக்கொண்டு பைக்கில் தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிந்து, காமராஜ் நகரைச் சோ்ந்த முத்துமுருக பாண்டியன் மகன் காா்த்திக் (25), அதே பகுதியைச் சோ்ந்த தங்கமாரிமுத்து மகன் முத்துப்பாண்டி (28) ஆகிய இருவரையும் கைது செய்த, பணம், பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story