வீட்டின் கதவை உடைத்து திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை

வீட்டின் கதவை உடைத்து திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
பைல் படம்
தோவாளையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (50). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தோவாளை கமல்நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி அவர்கள் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு மார்த்தால் என்ற பகுதியில் உள்ள தங்கள் குடும்ப கோவிலுக்கு சென்றுள்ளனர். நேற்று காலை மூர்த்தியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் வெளியே வந்து பார்த்தபோது, மூர்த்தி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அவர் உடனடியாக மூர்த்திக்கு தகவல் கொடுத்தார். மூர்த்தி வீட்டில் வந்து பார்த்த போது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் உள்ள இருந்த 70 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து அவர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story