வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

ஆத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்மநபர்கள்.போலீசார் விசாரணை.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வசிப்பவர் வெங்கடேசன் (வயது 31). இவர், பொக்லைன் எந்திர டிரைவர். இவரும், அவருடைய மனைவி பிரியங்காவும் ஆத்தூர் கோட்டை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story