வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, பொருட்கள் திருட்டு - போலீசார் விசாரணை

வீட்டின் பூட்டை உடைத்து, 2 பவுன் நகை, பொருட்கள் திருட்டு போலீசார் விசாரணை
பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், மகன் நவநீதன் 27. இவர் கீழ கணவாய் அரசு பாலிடெக்னிக்ல் விரிவுரையாளராக பணி செய்து வருகிறார். மேலும் இவரது சகோதரர், சதீஷ்குமார் 29, இவர்கள் இருவரும் திருமணம் ஆகாத நிலையில் அம்மா அப்பா இறந்துவிட்டதால், அண்ணன் தம்பி இருவரும் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஏ.வி.ஆர் நகர் பகுதியில் கடந்த 1வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் சதீஷ்குமார் என்பவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதன் காரணமாக பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் திருச்சி மருத்துவமனையில் உள்ள அண்ணனிடம் சென்றுவிட்டு காலையில் பெரம்பலூர் வந்து பணிக்கு செல்வதுமாக இருந்துள்ளார். அதேபோல் டிசம்பர் 21ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு சென்று விட்டார். மீண்டும் டிசம்பர் 22ஆம் தேதி பகலில் பெரம்பலூர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட வீட்டினுள் இருந்த பீரோவில் இருந்த இரண்டு பவுன் செயின் மற்றும் கேஸ் சிலிண்டர் ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்கள் திருடி போனது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு கைவிரல் ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்து ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story