ரோட்டரி சங்கம் சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

தர்மபுரி விஜய் வித்யாலயா பள்ளி அருகே டிஎன்வி நகர் தர்மபுரி ரோட்டரி சங்கம் சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது
தர்மபுரி ரோட்டரி சங்கம், தர்மபுரி ரோட்டரி மிட்டவுன் சங்கம், தர்மபுரி ரோட்டரி எலைட் சங்கம் மற்றும் தாரிகா ஸ்கேன் இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் இன்று முதல் 29/02/24 வரை தாரிகா ஸ்கேன்ஸ்-ல் ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் DNC.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் விக்ரம், தர்மபுரி ரோட்டரி சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, தருமபுரி மிட்டோன் சங்க தலைவர் இளவரசன், ரோட்டரி எலைட் சங்கத் தலைவர் ஸ்ரீதர், நிர்வாகிகள் கணேசன் ஜெயவேல், கிருஷ்ணன், வெங்கடேஷ்,.செழியன், அசோக் பிரபு, இளம்பரிதி, சங்கர், முகேஷ், செந்தில் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags

Next Story