நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் - பில் கிளார்க் கைது

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் -  பில் கிளார்க் கைது

கைது செய்யப்பட்ட ஜெகதீசன்

உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடமிருந்து 16,620 ரூபாய் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்-யை லஞ்ச ஒழிப்பு போலிசார் கையும் களவுமான கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், இவர் தனது 7 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல்சாகுபடி செய்து கடந்த 14 ஆம் தேதி அம்பட்டையம்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்துள்ளார்., அரசின் கொள்முதல் நிலையத்தில் பில் கிளார்க்-ஆக பணியாற்றி வரும் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஜெகதீசன் விவசாயியின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் சுமார் 277 மூட்டைகளுக்கு 16620 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.,

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி முருகன், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தன் அடிப்படையில் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி முருகன், பில் கிளார்க் ஜெகதீசனிடம் கொடுத்த போது கையும் களவுமாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

Tags

Next Story