செங்கல் சூளை தொழிலாளி அடித்துக்கொலை - சகலையை கைது செய்தது போலீஸ்!

செங்கல் சூளை தொழிலாளி அடித்துக்கொலை சகலையை கைது செய்தது போலீஸ்!
விராலிமலை அருகே உள்ள சரளபள்ளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவரது மனைவி இளஞ்சியம் (36), அவரது தங்கை சின் னம்மாள் (25), சின்னம்மாளின் கணவர் சின்னச்சாமி (27). இவர்கள் 4 பேரும் கீரனுார் சாலையில் கல் குத்தான்பட்டி என்ற இடத்தில் செயல்படும் ஆறு முகம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தங்கி வேலைபார்த்து வந்தனர். சுப்பிரமணிக்கும், மனைவி இளஞ்சியத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை செங்கல் சூளைக்கு உரிமையாளர் ஆறுமுகம் வந்தபோது,சுப்பிரமணி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இலுப்பூர் டிஎஸ்பி முத்துராஜா, விராலிமலை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் மனைவியை சுப்பிரமணி தாக்கினார். அதை தங்கை சின்னம்மாள், கணவர் சின்னச்சாமி ஆகியோர் தடுத்தனர். அப்போது சின்னசாமிக்கும், சுப்பிரமணிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட தும், இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த சுப்பிரமணி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சின்னச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story