மதுரை எய்ம்ஸ்க்கு செங்கல் - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

மதுரை எய்ம்ஸ்க்கு செங்கல் - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் இருந்து மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர். காமராஜர் சிலை அருகே சென்றபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊர்வலம் செல்ல அனுமதியில்லை, கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து செங்கல் அனுப்பும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags

Next Story