நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை 

நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி ஆர்ச்கேட் கேட் எதிரே விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆர்ச்கேட் எதிரே மேம்பாலம் கட்டும் பணிக்காக அடித்தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story