நொய்யல் ஆற்றில் பாலம் கட்டுமானப் பணி; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நடந்துவரும் பாலம் கட்டுமான பணிகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் நொய்யல் ஆற்றில் பாலம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story