வீட்டின் கதவை உடைத்து ஆறு பவுன் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ஆறு பவுன் திருட்டு

திருமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து ஆறு பவுன் திருட்டு சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.


திருமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து ஆறு பவுன் திருட்டு சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
திருமங்கலம் சோழவந்தான் ரோட்டை சேர்ந்த செல்வகுமார் இவர் அப்பகுதியில் மெக்கானிக் நடத்தி வருகிறார் இவருடைய மனைவி சுந்தரி.இந்நிலையில் செல்வகுமார் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மனைவி சுந்தரி வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றார் மாலையில் வீடு திரும்பிய சுந்தரி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்து ஆறு பவுன் நகையை மறுபடியும் நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது இது குறித்து செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story