வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

திருட்டு

தர்மபுரி மாவட்டம், வி செட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.செட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அர்ஷத். மெக்கானிக் இவரது மனைவி தஸ்வின் நேற்று முன்தினம் அர்ஷத் வேலை காரணமாக சேலத்துக்கும். தஸ்வின் தர்மபுரி கோட்டையில் உள்ள தாயார் வீட்டுக்கும் சென்று இருந்தனர். இந்திலையில், நேற்று அவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிந்ததை கண்டு அருகில் வசித்து வருபர்கள் திடுக்கிட்டனர்.

இது குறித்து அர்ஷத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே, அவர் வீட்டுக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தகை, 37 ஆயிரம் பணம் மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டார். வீட்டில் ஆட்கள் இல் லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே தகர்த்து உள்ளே வைத் திருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நேற்று மாலை தர்மபுரி நகர பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி தருமபுரி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story