கடையின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனங்கள் கொள்ளை !

கடையின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனங்கள்  கொள்ளை !

கொள்ளை

கடையின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனங்கள் திருடி சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவிச்சு.
கோவை:குனியமுத்தூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பிரசாத் கண்ணன்(30) ஆவரம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் NPO3 FRiGATZZ PIT STOP என்ற பெயரில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவதன்று இரவு கடையை மூடிவிட்டு சென்றவர் இரண்டு தினங்களுக்கு பின் கடையை திறந்து பார்த்தபோது வாடிக்கையாளர் பழுது பார்க்க கொடுத்த பல்சர் மற்றும் யமாஹா ஆகிய இரு வாகனங்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பிரசாத் கண்ணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story