சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை - போக்குவரத்து பாதிப்பு

சாலையில்  முறிந்து விழுந்த மரக்கிளை - போக்குவரத்து பாதிப்பு

முறிந்து விழுந்த மரக்கிளை

கள்ளக்குறிச்சி அருகே விருகாவூரில் சாலையோர அரச மரக்கிளை முறிந்து விழுந்ததில் கூத்தக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் 100 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. கூத்தக்குடி சாலையோரம் அரசு பெண்கள் பள்ளியை ஒட்டியபடி உள்ள இந்த மர நிழலில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெயில் நேரத்தில் இளைப்பாறுவது வழக்கம். இந்த மரத்தின் கிளை நேற்று மாலை 5:15 மணிக்கு திடீரென முறிந்து விழுந்தது. அப்போது அதன் கீழ் நிறுத்தியிருந்த வேன் மற்றும் கார் மற்றும் இரு வாகனங்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மரக்கிளைகளை அகற்றினர். இதனால், 6;15 மணி வரை ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

Tags

Read MoreRead Less
Next Story