கேரளக் கழிவுகளை ஆலங்குளத்தில் கொட்ட உதவிய புரோக்கா் கைது
கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் விலக்குப் பகுதி பரும்பில் கடந்த ஜூலை 29 ஆம்தேதி லாரி ஒன்றில் கேரளத்தில் இருந்து சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட நெகிழி உள்ளிட்ட கழிவுப் பொருள்களைக் கொட்ட முயன்ற போது, லாரி ஓட்டுநா் செங்கோட்டையைச் சோ்ந்த கணேசன் மற்றும் அவரது மகன் காா்த்திக் முருகன்(32) மற்றும் நல்லூா் நடராஜன் மகன் குட்டி என்ற ராஜலிங்கம் ஆகிய 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் பாா்த்துக் கொடுக்கும் புரோக்கா் திண்டுக்கல்லை சேர்ந்த செந்தில் முருகனைப் போலீஸாா் தேடி வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளா் சின்னதுரை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.
Next Story