சாலைமறியலில் ஈடுபட்ட அண்ணன்- தம்பியால் பரபரப்பு

சாலைமறியலில் ஈடுபட்ட அண்ணன்- தம்பியால் பரபரப்பு

 சாலைமறியலில் ஈடுபட்ட அண்ணன்- தம்பி

ஆத்தூரில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய அண்ணன்- தம்பியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
கெங்கவல்லி: சேலம் ஆத்தூர் செங்கல்பட்டு மாவட்டம் மேலேரிப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன்கள் சுரேஷ் (வயது34), லட்சுமணன் (30). இவர்கள் இருவரும் நெல் அறுவடை எந்திரம் வாங்க ஆத்தர் ராசிபுரம் பிரிவு ரோட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் செலுத்தினர். மீதமுள்ள ரூ. 21 லட்சத்தை வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் ரூ. 75 ஆயிரம் தந்தால்தான் எந்திரம் தரமுடியும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், லட்சுமணன் ஆகிய அண்ணன்- தம்பி இருவரும் திடீரென ஆத்தூர்- சேலம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது உடலலில் டீசலை ஊற்றிக் கொண்டதாக தெரிகிறது.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story