சிவகாசி அருகே கொலை வழக்கில் அண்ணன், தங்கை கைது

சிவகாசி அருகே கொலை வழக்கில் அண்ணன், தங்கை கைது
பைல் படம் 
சிவகாசி அருகே தனது மனைவியுடன் பழகிய இளைஞரை அடித்து கொலை செய்த வழக்கில் அண்ணன், தங்கையை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கட்டளைப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(38).இவரது மனைவி வெண்ணிலா(34). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.மூர்த்தி விருதுநகர் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஓட்டுநராக வேலை செய்வதால்,வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வார். வெண்ணிலாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தனது உறவுமுறை சகோதரரின் மகன் கணேஷ்குமார்(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை மூர்த்தி கண்டித்ததால் வெண்ணிலா மகளுடன் மாயமானார். இதுகுறித்து மாரனேரி போலீஸில் புகார் அளித்த நிலையில்,கடந்த இரு நாட்களுக்கு முன் இரு தரப்பையும் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வெண்ணிலா கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி மற்றும் அவரது சகோதரி நந்தினி(26) இருவரும் சேர்ந்து கணேஷ்குமாரை கட்டையால் தாக்கினர்.இதில் படுகாயமடைந்த கணேஷ்குமாரை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் மாரனேரி போலீஸார் மூர்த்தி,நந்தினி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story