சொத்து தகராறு -அண்ணன் தங்கை மோதல்

சொத்து தகராறு -அண்ணன் தங்கை மோதல்

சொத்து தகராறு

விருதுநகரில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணன் தங்கை இடையே மோதல் இருவரும் மற்றொருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த ஸ்மபவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகம் இவருடைய சகோதரி மல்லிகா இவர்களுக்கிடையே பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்த பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மல்லிகா தன் சகோதரர் ஆறுமுகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ஆறுமுகம் விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தின் எதிர் நின்று கொண்டிருந்த ஆறுமுகத்தின் சட்டையை பிடித்து மல்லிகா தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்கிய மல்லிகா சொத்தை தன்னிடம் தடுமாறும் கேட்டு கொலை மிரட்டல் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்பு அங்கிருந்து விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் மல்லிகா தன் சகோதரர் ஆறுமுகத்தின் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற கோரி ஆறுமுகம் தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியும் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சொத்து பிரச்சனை காரணமாக சகோதர சகோதரிகள் ஒருவர் மீது ஒருவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags

Next Story