குளச்சல் அருகே வீடு புகுந்து சகோதரியை தாக்கிய சகோதரர்கள்

குளச்சல் அருகே வீடு புகுந்து சகோதரியை தாக்கிய சகோதரர்கள்

வழக்குபதிவு

கன்னியாகுமரி மாவட்டம்,வாணியக்குடியில் முன்விரோத்தால் இளம்பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் ஆன்டனி. மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி லலிதா (55). இவரது சகோதரர்கள் ரவின் (42), மெர்லின் (40), குமார் (44), ஆல்வின் (39) இவர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீன், லலிதாவின் மகள் ஆஸ்லின் ,அனிஷா என்பவரை தாக்கியுள்ளார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் சம்பவ தினம் சகோதரர்கள் நான்கு பேரும் மேரிலலிதாவின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அவரின் மகன் அஜித்குமார் என்பவரை அடிக்க துரத்தியுள்ளனர். இதை பார்த்த மேரி லலிதா அவர்களை தடுத்துள்ளார்.

அப்போது சகோதரர்கள் நான்கு பேரும் மேரிலலிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் ரவின் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story