சிறுத்தை தாக்கியதில் எருமை உயிரிழப்பு !

சிறுத்தை தாக்கியதில் எருமை உயிரிழப்பு !

எருமை உயிரிழப்பு

சிறுத்தை தாக்கியதில் எருமை உயிரிழந்தது.

சிறுத்தை தாக்கியதில் எருமை உயிரிழப்பு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் வனச்சரகத்துக்குட் பட்ட திங்களூர் டி.பி.தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேவசாமி. இவர், தான் வளர்த்து வந்த மாடு மற்றும் எருமைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று முன் தினம் மாலை அவற்றை பிடிக்கச் சென்றபோது, ஒரு எருமையைக் காணவில்லை. சிறிது தூரம் தேடிச் சென்றபோது, எருமை உயிரிழந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கேர்மாளம் வனத்துறையினர் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில் எருமை உயிரிழந்தது தெரியவந்தது. கால்நடைகளை வேட்டையாட மீண்டும் சிறுத்தை வரலாம் என அச்சம் தெரிவித்துள்ள கிராம மக்கள், அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story