திமிரி அருகே காளை விடும் விழா!

திமிரி அருகே காளை விடும் விழா!

காளை விடும் விழா

திமிரி அருகே காளை விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் மல்லியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது.விழாவை ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கார் தொடங்கி வைத்தார். முன்னதாக பொதுமக்கள் பொங்கல் வைத்து மல்லியம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. மேலும் மல்லியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து காளை விடும் விழாவில் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இரவில் சாமி வீதி உலாவும், நாடகமும் நடைபெற்றது.

Tags

Next Story