மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு எருது விடும் திருவிழா

மார்கழி மாதப்பிறப்பை  முன்னிட்டு எருது விடும் திருவிழா

எருது விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சேங்கபுத்தேரி ஊராட்சியில் மார்கழி 1 மாதப்பிறப்பு முன்னிட்டு எருது விடும் திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. இங்கு சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தும் எருதுகள் கொண்டுவந்து விடப்பட்டது. அப்பொழுது சேகபுத்தேரி, பாலூர், மேல்சோழங்குப்பம், தொப்பானந்தல் ஆகிய கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. எருது விடும் பொழுது இந்த எருதை முடிந்தால் பிடித்து பாருங்கள் என்று பல எருதுகள் மீது பந்தயம் கட்டி எருதுவிட்டனர் அதில் எண்ணற்ற பார்வையாளர்கள் பங்கேற்று எருதுகளை பிடிக்கமுயன்றனர். அத்துடன் எருதுகளின் தலையில் உள்ள கொம்பில் வண்ண, வண்ண கொடிகள், சேலைகள், பூக்கள் ஆகியவையால் அலங்காரம் செய்து எருதுகளை விட்டனர். இதை பார்ப்பதற்காக எண்ணற்ற இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story