ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் 7-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

ஏலகிரி மலை அத்தனாவூர்   கிராமத்தில் 7-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

எருது விடும் திருவிழா

ஏலகிரி மலையில் எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் 7-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந்தன- காளையர்கள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூர் மலை கிராமத்தில் மாபெரும் எருதுவிடும் திருவிழா விழா குழு தலைவர் தங்கவேல், மற்றும் ஊர்பொதுமக்கள் தலைமையில் நடைப்பெற்றது. திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடின. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.77000, இரண்டாம் பரிசாக ரூபாய் 60000 மூன்றாம் பரிசாக ரூபாய் 50,000 உட்பட மொத்தம் 63 பரிசுகள் வழங்கப்பட்டது. திருவிழாவில் சுமார் 2000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர். இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை வட்டாட்சியர் கோட்டாட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி அளித்தனர். மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது. திருப்பத்தூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story