கருக்கல்வாடியில் எருதாட்டம் - கண்டுகளித்த பொதுமக்கள்

ஓமலூர் அருகே கருங்கல்வாடியில் நடந்த எருதாட்டத்தை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகிலுள்ள கருக்கல்வாடியில் 300 காளை மாடுகள் பங்கேற்ற எருதாட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காளைகளை கயிற்றில் கட்டி உற்சாக படுத்தும் வகையில் காளைகளின் முன்பு சிறிய பொம்மைகளை காட்டி அங்குமிங்கும் இழுத்து சென்று மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்த மாடுகளை பிடித்து விளையாடினர். இதையடுத்து எருதாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து, சிறப்பு உணவு வகைகள், பழங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதால் ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தாரமங்கலம் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story