மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் தப்பியோட்டம்

மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் தப்பியோட்டம்

காவல் நிலையம்

தாளக்குடி கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் கடத்திய அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடினார் . மாட்டு வண்டி மற்றும் மணலை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியில் உள்ள பொள்ளிடம் ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணலை கடத்திக் கொண்டு வந்தார் கிராம நிர்வாக அலுவலரை கண்டதும் மணல் கடத்தி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாட்டுவண்டி மற்றும் கால் யூனிட் மணலை பறிமுதல் செய்தனர் மேலும் தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story