திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்

திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மாடுகள் பங்கேற்றன.
திருப்புத்துார் அருகே கே.ஆத்தங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 7 வண்டிகள் பங்கேற்றன. முதலிடத்தை தேனி தேவாரம் ஈஸ்வரன், இரண்டாமிடத்தை கல்லல் உடையப்பா மார்க்கண்டேயன், மூன்றாமிடத்தை திருப்பன்துருத்தி ஆனந்த அய்யனார் வென்றனர். சின்னமாடு பிரிவில் 18 வண்டிகள் பங்கேற்றதில் இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. அதில் முதல் பிரிவில் ஜெமினிப்பட்டி ஆண்டிபாலகன்,கோரவியல்காடு முத்துகிருஷ்ணன், துலையானுர் பாஸ்கரன், கானாடுகாத்தான் சோலையாண்டவர் ஆகியோரும், இரண்டாவது பிரிவில் அமராவதி புதூர் வேலு கிருஷ்ணன், தேவாரம் ஈஸ்வரன், ஈளக்குடிப்பட்டி யாழினி பெரியகருப்பன், ஆத்தங்குடி கண்ணாத்தாள் ஆகியோரும் வென்றனர். ஏற்பாட்டினை கிராமத்தினர், விழா கமிட்டியினர், சிங்கப்பூர் இளைஞர்கள் செய்தனர்.

Tags

Next Story