அரசு பள்ளியில் சிறுமிகளிடம் சில்மிஷம் - உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது....

அரசு பள்ளியில் சிறுமிகளிடம் சில்மிஷம் -  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது....

 உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜெயங்கொண்டம், ஏப்.1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாநகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் கர்ணன் (36) இவர் இரவாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சிகள் கற்றுக் கொடுப்பதாக கூறி 20-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 24 ஆம் தேதி இதுகுறித்து அந்தப் பள்ளியில் ஒரு சிறுமி 1098 - க்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் குழந்தைகள் நல களப்பணியாளர் வீரமணி தலைமையிலான குழுவினர் பள்ளியில் சென்று விசாரணை செய்து, இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்.போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த கர்ணனை தேடி விசாரித்து வந்த நிலையில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story