குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதி !

குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதி !

சாலை

மானாமதுரை அருகே குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கால்பிரவு கிராமத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள் மானாமதுரைக்கு வருகின்றனர். கால்பிரவிலிருந்து வரும் ரோடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ரோடு போடப்பட்டு நீண்ட காலமாகியும் இதுவரை ரோட்டை சீரமைக்காததால் அவசர காலங்களில் கூட ஆட்டோக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் கூட வர மறுப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மருத்துவமனைக்கு கூட கிராம மக்கள் செல்ல முடியவில்லை. மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story