ஊர் பொதுகுளத்தில் கொத்து, கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

பாபநாசம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன் என்பவர் கடந்தாண்டு ஏலத்தில் எடுத்து மீன்கள் வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் திடீரென குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதந்துள்ளது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேந்திரன் இது குறித்து, கபிஸ்தலம் காவல் காவல் நிலைய போலீசாரிடம் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குளத்தில் உள்ள நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர் மேலும் இது சமூக விரோதிகளின் செயலா அல்லது வெயிலின் தாக்கமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Tags

Next Story