புதுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் கதவை உடைத்து திருட்டு

புதுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் கதவை உடைத்து திருட்டு

திருட்டு நடைபெற்ற பள்ளி

புதுக்கோட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் கதவை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை சமத்துவபுரதில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று இரவு மர்ம நபர்கள் பள்ளியின் கதவை உடைத்து உள்ளே சென்று டேபிள் ஃபேன் ஒன்று சீலிங் ஃபேன் மூன்று ஆகியவை திருடி சென்றதோடு வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள எல்.சி.டி டிவியையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 56 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து பூட்டி விட்டு சென்றுள்ளனர்.வழக்கம்போல் இன்று காலை பள்ளியில் பணி புரியும் முறுகாயி என்ற ஆயா அம்மா பள்ளியை திறக்க வந்த பொழுது பள்ளியின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இதனை அடுத்து அந்த வார்டு கவுன்சிலர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் வந்து பார்த்தபோது நேற்று இரவு மர்ம நபர்கள் பள்ளியில் இருந்த டேபிள் ஃபேன் ஒன்று சீலிங் ஃபேன் மூன்று ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் பள்ளி வகுப்பறையில் மாட்டி இருந்த எல்சிடி டிவியை கலட்ட முயன்ற போது அதை எடுக்க முடியாததால்,

அந்த டிவியை உடைத்து சேதப்படுத்தியதோடு பள்ளியில் உள்ள மின் ஒயர்களையும் சேதப்படுத்தி சென்று உள்ளனர். இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அரசு பள்ளியில் கதவை உடைத்து பள்ளியில் இருந்த பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story