கூடலூர் அருகே பூட்டிய வீட்டில் திருட்டு முயற்சி

கூடலூர் அருகே பூட்டிய வீட்டில் திருட்டு முயற்சி
காவல் நிலையம் 
கூடலூர் அருகே பூட்டிய வீட்டில் திருட்டு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் அமெரிக்காவில் குடியிருந்து வருகிறார். கூடலூரில் உள்ள இவரது வீட்டில் இவரது அண்ணன் மனைவியும் வேலைக்காரியும் தினமும் சென்று சுத்தம் செய்து விட்டு வருவது வழக்கம்.

நேற்று அந்த வீட்டிற்கு செல்லும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு கிடந்தது. அவரது அண்ணல் செந்தில்குமரன் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story