சாலைகிராமம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

சாலைகிராமம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

காவல் நிலையம் 

சாலைகிராமம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமம் அருகே சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக சந்திரகாந்த் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சந்திரகாந்த் குடும்பத்துடன் அவரது மனைவி ஊரான நானாமடை கிராமத்திற்கு சென்று விட்டு நேற்று சூராணம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10பவுன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சாலைகிராமம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story