வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய தம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளி புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த தொழிலாளி வேலு (52) புகார் மனு அளித்தார்.அதில், நான் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது வீடு அலமேலுமங்காபுரத்தில் உள்ளது. என்னுடைய தம்பி திருமணம் முடிந்து ராணிப்பேட்டையில் வசித்து வருகிறான். கழுத்து எலும்பு முறிவிற்காக நான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றேன். அந்த சமயத்தில் எனது தம்பி மற்றும் அவனுடைய மனைவி எனது வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் தங்க நகை, ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நான் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையின்போது எனது தம்பி வீட்டில் இருந்து திருடிய பொருட்களை திரும்ப கொடுக்க கால அவகாசம் தரும்படி எழுதி கொடுத்தான். ஆனால் இதுவரை நகை, பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. எனவே எனது தம்பி மீது நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story