வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சேட்டு இவர் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகனா என்பவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது இவர்கள் இருவரும் நேதாஜி நகர் பகுதியில் உள்ள அன்பு என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி சேட்டு மற்றும் அவரது மனைவி மேகனா இருவரும் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, சேட்டு வீட்டின் அருகில் இருந்தவர்கள் சேட்டுவிற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கிருந்து வந்த சேட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 7000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து சேட்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை சேகரித்து இக்கொள்ளைச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தொடரும் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story