கொய்யா பழத்தில் வெடி - ஆடுகள் பலி

கொய்யா பழத்தில் வெடி - ஆடுகள் பலி
பலியான ஆடு 
கரிவலம்வந்தநல்லூர் அருகே கொய்யா பழத்தில் வைக்கப்பட்டுள்ள வெடியைக் கடித்து ஆடுகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் முருகன். 54. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு கரிவலம்வந்தநல்லூர் பெரியகுளம் கண்மாயில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது 2 ஆடுகள் அங்கிருந்த கொய்யா பழத்தைக் சாப்பிட்டு உள்ளது. மேற்படி கொய்யாப்பழத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடி மருந்தை ஆடுகள் கடித்துள்ளது. வெடி மருந்து வெடித்து இரண்டு ஆடுகள் இறந்துள்ளன. இது சம்பந்தமாக ஆட்டின் உரிமையாளரான முருகன் கரிவலம் வந்த நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் வெடிகுண்டுகள் உள்ளதா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story