சாலக்கரைப்பட்டி அருகே பைக் மீது பேருந்து மோதி விபத்து: பெண் படுகாயம்

சாலக்கரைப்பட்டி அருகே பைக் மீது பேருந்து மோதி விபத்து: பெண் படுகாயம்

மருத்துவமனை

சாலக்கரைப்பட்டி அருகே பைக் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளனதில் பெண் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சாலகரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி சுதா வயது 30. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி பஞ்சவர்ணம் வயது 65. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் ஜூன் 12-ம் தேதி இரவு 7:30 மணி அளவில் வெங்கடாபுரத்திலிருந்து வெள்ளியனை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள மூன்று சாலை சந்திப்பு அருகே செல்லும்போது, அதே திசையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள லந்தகோட்டை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் வயது 52 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், சுதா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுதா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இது தொடர்பாக சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பால்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story