மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்-வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்-வாலிபர் சாவு

விபத்து

செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிகணேஷ் (வயது 33). இவர் பனையூர் கிராமத்தில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் செய்யாறு நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது ஆரணி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிகணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story