உத்திரமேரூர் அருகே மாரடைப்பால் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு

உத்திரமேரூர் அருகே மாரடைப்பால் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு
மாரடைப்பால் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு
உத்திரமேரூர் அருகே மாரடைப்பால் பேருந்து நடத்துனர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 52. செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை செங்கல்பட்டில் இருந்து பூதுார் நோக்கி சென்ற '129சி' என்ற பேருந்தில் நடத்துனராக பணியில் இருந்தார். செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் அருகே பேருந்து சென்ற போது, சேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்தபோது,

சேகர் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story