அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய பேருந்து நடத்துனர் கைது

பென்னாகரத்தில் சாலையில் செல்லும் பொது மக்களை அரிவாளை காட்டி மிரட்டிய பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட,பென்னாகரம் தாசம்பட்டி சாலையில் செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் அரிவாளை காட்டி மிரட்டுவதாக பென்னாகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அரிவாளுடன் சாலையில் நட மாடிய வாலிபரை கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில் அவர் சிவகங்கைமாவட்டம் பில்லூர் சித்தலூர் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் சந்தோஷ்குமார் என்பதும் பென்னாகரம் பகுதியில் இயங்கும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பென்னாகரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story