பஸ் சேவை நிறுத்தம்: கிராம மக்கள் சாலை மறியல்

பஸ் சேவை நிறுத்தம்: கிராம மக்கள் சாலை மறியல்

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மற்றும் மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் நடத்தினர்.

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மற்றும் மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம், இந்த கிராமத்திற்கு காலை, மாலை என‌ 4 முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது. மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்து. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பேருந்தும் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 17ந்தேதி முதல் கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அக்கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கிராம மக்கள் கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story