பேருந்தை அதிவேகமாக ஓட்டியதில் பயணிக்கு காயம் - டிரைவர் மீது வழக்கு

பேருந்தை அதிவேகமாக ஓட்டியதில் பயணிக்கு காயம் - டிரைவர் மீது வழக்கு

வழக்குப்பதிவு 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வெள்ளரி தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (70).கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பேரளம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். டிரைவர் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதால் ஜெகதீசனுக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த ஜெகதீசன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story