ரிஷிவந்தியத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

ரிஷிவந்தியத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு 

ரிஷிவந்தியத்தில் வெவ்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைகள் திறப்பு விழா நடைபெற்றது.

ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்துடன் கூடிய பயணியர் நிழற்குடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த 2 நிழற்குடை திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நிகழ்குடைகளை திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், சவரிராஜன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜி, தொழிலாளரணி மாவட்ட தலைவர் சிவமுருகன், கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பார் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story